ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ள படம் பத்மாவதி. இது முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி, மற்றும் சித்தூர் மகாராணி பத்மாவதி ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட வரலாற்றுப் படம். இந்தப் படத்தில் ராஜபுதனத்து மகாராணியான பத்மாவதி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜபுத்திர சமூகத்தினர் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ராஜபுத்திர சமுதாயத்தை சேர்ந்த பிரமுகர்கள் நேற்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானை சந்தித்து பேசினார்கள். அப்போது பத்மாவதி படத்திற்கு மத்திய பிரதேசத்தில் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
இந்த சந்திப்பிற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறியதாவது: பத்மாவதி படத்தில் வரலாறு திரிக்கப்பட்டிருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. மாநில மக்களின் உணர்வுகளை பாதிக்கும் பத்மாவதி படத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கினாலும் மத்திய பிரதேசத்தில் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம். என்றார். பத்மாவதி படத்திற்கு உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து மத்திய பிரசேதத்திலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு வங்க மாநிலம் படத்தை வரவேற்றுள்ளது.