டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை விவகாரத்தில் சிக்கி, சிறை சென்று தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப். அப்படி விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று தான் அவர் வெளிநாட்டு செல்லக்கூடாது என்பது.. அதற்கேற்றவாறு அவரது பாஸ்போர்ட் கேரள உயர்நீதிமன்றத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தான் துபாய் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ள திலீப், அதற்காக தனது பாஸ்போர்ட்டை தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
கொச்சியில் 'தே புட்டு' என்கிற ஹோட்டலை திலீப் நடத்தி வருகிறார் அல்லவா..? துபாயிலும் அதன் கிளையை திறக்க ஏற்பாடுகளை செய்து வந்தார் திலீப். இது கடந்த வருடத்திலேயே திட்டமிட்ட நிகழ்வு என்பதையும் காரணமாக குறிப்பிட்டுள்ளாராம் திலீப்.