ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள பத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்து உள்ளதாக ராஜபுத்திர வம்சத்தினர் கடும் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர். வட மாநிலங்களில் பல அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு படத்துக்கு யுஏ சான்றிதழ் தருவதாக ஒத்துக் கொண்டிருந்த தணிக்கை குழு, திடீரென அதிலிருந்து பின்வாங்கி உள்ளது. தணிக்கை குழுவிற்கு அனுப்பிய விண்ணப்பம் நிறைவாக இல்லை, குறைகள் இருக்கிறது என்று கூறி விண்ணப்பத்தை திருப்பி அனுப்பி உள்ளது.
கடும் எதிர்ப்புக்கள், போராட்டங்கள் மற்றும் தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது ஆகிய காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக வயாகம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி டிசம்பர் 1 ம் தேதி பத்மாவதி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.