'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவதி படத்திற்கு ராஜபுத்திர வம்சத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சித்தூர் மகாராணி பத்மாவதி பற்றி படம் தவறாக சித்தரிப்பதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வட மாநிலங்களில் பல அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு படத்துக்கு யுஏ சான்றிதழ் தருவதாக ஒத்துக் கொண்டிருந்த தணிக்கை குழு, திடீரென அதிலிருந்து பின்வாங்கி உள்ளது. தணிக்கை குழுவிற்கு அனுப்பிய விண்ணப்பம் நிறைவாக இல்லை, குறைகள் இருக்கிறது என்று கூறி விண்ணப்பத்தை திருப்பி அனுப்பி உள்ளது. என்ன குறை என்று அவர்கள் தெரிவிக்கவில்லை. நாடு முழுவதும் எழுந்து வரும் எதிர்ப்பு காரணமாக விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிர்வாகி அஜித் ஆந்த்தே கூறியதாவது: தணிக்கை குழு விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது உண்மைதான். குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிப்போம். படத்துக்கு எதிராக நடந்து வரும் பிரச்னைகளுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. திட்டமிட்டபடி படம் டிசம்பர் 1ந் தேதி வெளியாகும். என்றார்.