தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் வெளியாக உள்ள படம் பத்மாவதி. இப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி, அந்த சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தீபிகா படுகோன, சஞ்சய் மீது கொலை மிரட்டல்கள் வருகின்றன. படம் வெளியாக விடமாட்டோம் என குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள சித்தார்த் மல்கோத்ரா, சஞ்சய் லீலா பன்சாலி மரியாதைக்குரிய நல்ல இயக்குநர், அவருடைய முந்தைய படங்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும். ஒரு படத்தை பார்க்காமல் எதிர்ப்பது என்பது தவறு. படத்தில் எந்த காட்சிகள் இருக்கலாம், இருக்க கூடாது என முடிவு செய்ய வேண்டியது சென்சார் தான். பத்மாவதி படம் ரிலீஸாக திரையுலகம் உதவும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.