ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுடில்லி : பாலிவுட்டின் பிரபல இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த, ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து பத்மாவதி என்ற படத்தை படமாக்கி உள்ளார். இந்த படம், அடுத்த மாதம் வெளியாகிறது. இப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி, அந்த சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக தீபிகா படுகோனே, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. இந்நிலையில் பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வக்கில் சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் சர்ச்சைக்குள்ளான பத்மாவதி படத்தை மீண்டும் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு இரண்டொரு நாளில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
பத்மாவதி படம் வருகிற டிச., 1-ம் தேதி ரிலீஸாகிறது.