ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
பாலிவுட்டில் வித்தியாசமான படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் இர்பான் கான். ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் காரிப் காரிப் சிங்கிள். பூ பார்வதி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தின் புரொமோஷனில் பங்கேற்ற இர்பான் பேசியதாவது...
இன்றைக்கு உள்ள ரசிகர்கள் எல்லாம் வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் பாகுபலி போன்றும், கோல்மால் அகைன் போன்ற படங்களையும் விரும்புகிறார்கள். இன்றைய டெக்னாலஜியில் ரசிகர்கள் உலகத்தரத்திலான படங்களை எதிர்பார்க்கின்றனர். பாலிவுட்வை விட பிராந்திய மொழி படங்கள் அந்த விஷயத்தில் முன்னேறி சென்று கொண்டிருக்கின்றனர். இன்னும் சூப்பர் ஸ்டார்களின் முகத்தை பயன்படுத்தி குப்பையான கதைகளை விற்க முடியாது. கதை சிறப்பாக இருந்து ரசிகர்களுக்கு அது பிடித்து போய்விட்டால் நிச்சயம் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் தான் என்று கூறியுள்ளார்.