தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் வித்தியாசமான படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் இர்பான் கான். ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் காரிப் காரிப் சிங்கிள். பூ பார்வதி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தின் புரொமோஷனில் பங்கேற்ற இர்பான் பேசியதாவது...
இன்றைக்கு உள்ள ரசிகர்கள் எல்லாம் வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் பாகுபலி போன்றும், கோல்மால் அகைன் போன்ற படங்களையும் விரும்புகிறார்கள். இன்றைய டெக்னாலஜியில் ரசிகர்கள் உலகத்தரத்திலான படங்களை எதிர்பார்க்கின்றனர். பாலிவுட்வை விட பிராந்திய மொழி படங்கள் அந்த விஷயத்தில் முன்னேறி சென்று கொண்டிருக்கின்றனர். இன்னும் சூப்பர் ஸ்டார்களின் முகத்தை பயன்படுத்தி குப்பையான கதைகளை விற்க முடியாது. கதை சிறப்பாக இருந்து ரசிகர்களுக்கு அது பிடித்து போய்விட்டால் நிச்சயம் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் தான் என்று கூறியுள்ளார்.