மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்த புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அவர், பாலிவுட் நடிகை நிஹாரிகாக தன்னை மயக்கி படுக்கைக்கு அழைத்தாக குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:
நானும் நடிகை நிஹாரிகா சிங்கும் மிஸ் லவ்லி என்ற படத்தில் சேர்ந்து நடித்தோம். ஒரு நாள் நிஹாரிகா சிங் என்னை அவருடையை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். நானும் அழைப்பை ஏற்று அவரது இல்லத்துக்கு சென்றேன். கதவை திறந்தபோது வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து என்னை வரவேற்றார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிஹாரிகா மிகவும் அழகாக இருந்தார். விருந்து முடிந்ததும் அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். நானும் அதை ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தேன். என்று எழுதியுள்ளார். நவாசுதீன் சித்திக்கிற்கு அஞ்சலி என்ற மனைவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சித்திக்கின் இந்த தகவலுக்கு பதிலளித்து நிஹாரிகா கூறியிருப்பதாவது: மிஸ் லவ்லி படத்தில் நானும் நவாத்சுதீனும் இணைந்து நடித்தபோது எங்கள் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஆனால் சில மாதங்கள் மட்டுமே அந்த தொடர்பு நீடித்தது. நான் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி அவரை படுக்கைக்கு அழைத்தேன் என்று கூறியிருப்பதை பார்த்து சிரித்துக்கொண்டேன். நவாஸுக்கு திருமணமான விஷயம் அப்போது எனக்கு தெரியாது. திருமணமானதை அவர் மறைத்து விட்டார். அவரது மனைவி கிராமத்தில் இருந்தார். அதனால்தான் என்னால் அவருக்கு திருமணம் ஆனதை கண்டுபிடிக்க முடியாமல் போனது. என்னை அவர் ஏமாற்றி விட்டார். என்று கூறியிருக்கிறார் நிஹாரிகா.