அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கமல்ஹாசன் சமீபகாலமாக விவசாயிகளை பற்றி அதிகம் பேசி வருகிறார். விவசாய சங்க நிர்வாகிகளையும் அவ்வப்போது சந்தித்து வருகிறார். இந்த நிலையில் வருகிற நவம்பர் 4ந் தேதி நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். இது தொடர்பாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
விளைச்சல் பாதிப்பு, விவசாயிகள் தற்கொலை உள்பட விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அனைத்து விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கூட்டம் சென்னை அடையார் முத்தமிழ் அரங்கத்தில் வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், நீரியியல் வல்லுனர் எஸ்.ஜனகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடுகின்றனர்.
இந்த கூட்டம் விவசாயிகள் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். கமல்ஹாசன் முற்போக்கு சிந்தனையாளர். தமிழகத்தில் விவசாயம் தான் அரசியல் என்று கூறி வருகிறார். எனவே அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். கமல்ஹாசன் நடிகர் என்பதால் மக்களிடையே விவசாயிகள் பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தும். என்கிறார் பி.ஆர்.பாண்டியன்.