டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'சாமி' திரைப்படம் 2003ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் ஒரு ஆக்ஷ்ன் படமாக இருந்தாலும் விக்ரம், த்ரிஷா இடையிலான காதல் காட்சிகள் ரசிகர்களை அதிகமாகக் கவர்ந்தன.
த்ரிஷாவுக்கு முதன் முதலில் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த படம் 'சாமி' படம் தான். அந்தப் படத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்து அவரைச் செல்லமாக அப்போது 'மாமி' என்று அழைத்தவர்கள் அதிகம். அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. அந்தப் படத்தின் வெற்றியே அவரை முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் அவரைக் கொண்டு சேர்க்க காரணமாக அமைந்தது.
14 வருடங்கள் கழித்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 'சாமி ஸ்கொயர்' தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாம் பாகத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க த்ரிஷா முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. விரைவில் த்ரிஷாவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று இப்படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவித்தார்.
விரைவில் படப்பிடிப்புக்குச் செல்ல உள்ள நிலையில் த்ரிஷாவின் விலகல் அதிர்ச்சியான ஒன்று தான். இத்தனை வருடங்களாகியும் த்ரிஷா கைவசம் நாயகியாக தற்போது ஐந்தாறு படங்கள் உள்ளன. இந்த நிலையில் 'சாமி ஸ்கொயர்' படத்தில் கீர்த்தி சுரேஷுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என்று த்ரிஷாவுக்கு தெரியாதா என்ன?. என்ன ஒன்று, இந்த முடிவை அவர் எப்போதோ எடுத்திருக்க வேண்டும். இருந்தாலும் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நிறைவாக செய்ய முடியும் என்பது சந்தேகம்தான்.