ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லிங்கா படத்திற்கு பிறகு கன்னட நடிகர் நான் ஈ சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார், தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ஹரிபிரியா, நடாஷா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் தலைப்பினை இதுவரை அறிவிக்காமல் இருந்து வந்த கே.எஸ்.ரவிக்குமார், கர்ணன், சமரசிம்ஹா ரெட்டி, நரசிம்ஹா ரெட்டி, நரசிம்ம நாயுடு, ஜெய் சிம்ஹா, சிம்ஹா என பல டைட்டீல்களில் எந்த டைட்டீலை படத்திற்கு வைக்கலாம் என்று பரிசீலனை செய்து வந்தார். இந்நிலையில், தற்போது ஜெய் சிம்ஹா என்ற தலைப்பினை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஜெய்சிம்ஹா படம் 2018 சங்கராந்திக்கு வெளியாகிறது.