ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர் ஐவி சசி காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார். இவர் நடிகை சீமாவின் கணவர் ஆவார்.
கேரள மாநிலம், கோழிக்கூட்டில் 1948-ம் ஆண்டு, மார்ச் 28-ம் தேதி பிறந்தவர் ஐவி சசி. சின்ன வயதிலேயே சினிமா மீது ஆர்வம் கொண்ட சசி, கலை இயக்குநராக தன் சினிமா பயணத்தை தொடங்கினார். பின்னர் இயக்கத்தில் கவனம் செலுத்திய சசி, 27-வது வயதில் உல்சாவம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன்பின்னர் பல வெற்றி படங்களை இயக்கி, மலையாள சினிமாவின் பிரபலமான இயக்குநராக திகழ்ந்தார். இவர் இயக்கிய ஆரூடம் படம் மிகவும் பிரபலமானது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. 70 முதல் 90 வரை மலையாள சினிமாவின் ஆளுமை இயக்குநராக திகழ்ந்த சசி, 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
மலையாளத்தில் அதிக படங்களை இயக்கியுள்ள சசி, தமிழில் கமலை வைத்து அலாவுதீனும் அற்புத விளக்கும், குரு, ரஜினியை வைத்து எல்லாம் உன் கைராசி, காளி போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
ஐவி.சசி, நடிகை சீமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனு என்ற மகளும், அனி என்ற மகனும் உள்ளனர்.