தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு ரிலீசான படம் மெர்சல். இந்த படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராகவும், மத்திய அரசை விமர்சித்தும் இடம்பெற்ற வசனங்கள் பெரிய அளவில் சர்ச்சை ஆக்கப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளை நீக்க பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் காட்சிகளை நீக்க வேண்டிய அவசியமில்லை என பிரபலங்கள் பலரும் மெர்சலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியனவும் மெர்சல் படத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இருப்பினும் மெர்சல் வசனங்கள் தொடர்ந்து சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அண்ணாநகர் போலீசில், நடிகர் விஜய் மீது புகார் அளித்துள்ளார். அதில், ஜிஎஸ்டி.,க்கு எதிராக பேசிய, வழிபாட்டு தலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.