இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தை ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மெர்சல் படப் பிரச்சினையில் அதற்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தது கமல்ஹாசன். அவர் தனது டுவிட்டரில் "மெர்சல் படம் ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. மறுதணிக்கை செய்யக்கூடாது. விமர்சனங்களை தர்க ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். விமர்சிப்பவர்களை மவுனமாக்க கூடாது. பேசினால்தான் இந்தியா ஒளிரும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு மற்ற நடிகர், நடிகைகள் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்.
இந்நிலையில் மெர்சல் படம் நேற்று (அக்.,22) கமலுக்கு போட்டுக் காட்டப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலத்தில் இருக்கும் டிஜிட்டல் தியேட்டரில் கமல் மெர்சல் படம் பார்த்தார். அவருடன் விஜய், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி, இயக்குனர் அட்லி ஆகியோரும் படம் பார்த்தனர். படம் முடிந்ததும் கமல் அனைவரையும் பாராட்டினார். அதன் பிறகு 20 நிமிடம் விஜய்யும், கமலும் தனியாக சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.