பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் நடித்து வெளிவந்துள்ள மெர்சல் படத்திற்கு ஆளும் பா.ஜ.அரசின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், ஆளும் கட்சியின் பிரமுகர்கள் மெர்சல் படத்தையும், விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கமல் உள்ளிட்ட திரையுலக முன்னணியினர் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் ரஜினி இந்த பிரச்சினை குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். ரஜினி பிரதமர் மோடியின் நண்பர் என்பதாலும், ஆளும் பா.ஜ.கட்சியின் ஆதரவு பார்வையில் இருப்பவர் என்பதாலும் ரஜினி கருத்து சொல்லவில்லை. மோடியை எதிர்க்க ரஜினிக்கு துணிச்சல் இல்லை என்று நெட்டிசன்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் ரஜினி நேற்று தனது டுவிட்டரில் மெர்சல் பட விவகாரம் குறித்து அவருக்கே உரிய ஸ்டைலில் கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் "முக்கியமான பிரச்சினை பேசப்பட்டுள்ளது. மெர்சல் பட குழுவுக்கு பாராட்டுகள்" என்று குறிப்பிட்டுள்ளார். ஜி.எஸ்.டி வரியை மெர்சல் படம் கடுமையாக விமர்சித்துள்ளது. மருத்துவம் வியாபாரமாவதை படம் விமர்சித்துள்ளது. இரண்டும் முக்கியமான பிரச்சினை, மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் சரியானவை என்பது ரஜினியின் கருத்தாக வெளிப்பட்டிருக்கிறது.