டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தீபாவளிக்கு தமிழில் வெளியான விஜய்யின் மெர்சல் படம், அதிரின்டி என்ற பெயரில் அக்டோபர் 26-ந்தேதி தெலுங்கில் வெளியாகிறது. மெர்சல் படத்தின் இந்த தெலுங்கு பதிப்பிற்கு இதுவரை பெரிய எதிர்ப்புகள் இல்லாமல்தான் இருந்து வந்தது. ஆனால், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சி, வசனங்கள் ஏற்படுத்தியுள்ள பரபரப்பு காரணமாக ஆந்திராவில் இப்போதே அதிரின்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக, ஏற்கனவே முடிவு செய்திருந்ததை விடவும் தற்போது தெலுங்கில் அதிகப்படியான தியேட்டர்களில் அதிரின்டியை வெளியிடவும் தயாராகி வருகிறார்களாம். அந்த அளவுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிரின்டி படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறதாம். ஆனால், தற்போது ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகளும், வசனங்களையும் நீக்க வேண்டும் என்கிற எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதிரின்டி படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய அந்த காட்சிகள் இல்லாமலேயே வெளியாகும் என்று தெரிகிறது.