மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் மகாநதி படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சமந்தா, மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், துல்கர்சல்மான் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் நடிக்க, துல்கர்சல்மான் ஜெமினிகணேசன் வேடத்தில் நடிக்கிறார். சமந்தா நிருபர் வேடத்தில் நடிக்க, பிரகாஷ்ராஜ் கதை வசனகார்த்தாவாக நடிக்கிறார். இந்நிலையில், மோகன்பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆக, மோகன்பாபு, கீர்த்தி சுரேஷின் அப்பா வேடத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.