டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தீபாவளிக்கு எந்தப் படம் வெளிவரும் என்பது அதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை தெரியாமலே இருந்தது. 'மெர்சல்' படம் தணிக்கைப் பிரச்சனையில் சிக்கியதால் எப்படியும் வராது என்று முடிவெடுத்து 'மேயாத மான், சென்னையில் ஒரு நாள் 2' ஆகிய படங்களை திடீரென தீபாவளிப் போட்டியில் இறக்கிவிட்டார்கள்.
'மெர்சல்' படம் வெளிவந்த மறுநாளே 'ஜிஎஸ்டி' சர்ச்சையில் சிக்கி படத்திற்கு அமோகமான விளம்பரம் கிடைத்து நாளை வரை பெரும்பாலான தியேட்டர்களில் படம் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. அப்படி என்னதான் அந்த வசனத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள மக்களின் முதல் சாய்ஸ் ஆக 'மெர்சல்' படம்தான் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் 'மேயாத மான், சென்னையில் ஒரு நாள் 2' ஆகிய படங்கள் இருக்கின்றன.
'மெர்சல்' புயலில் இருந்து தங்களது படத்தைக் காப்பாற்றிக் கொள்ள 'மேயாத மான்' குழுவினர் தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களிடம் படத்தைப் பற்றி கருத்தைக் கேட்டு பகிர்ந்து வருகிறார்கள். படத்தைப் பாராட்டி தனுஷ் டிவீட் செய்துள்ளார். இது போல மேலும் சில பிரபலங்களும் படத்தைப் பாராட்டி வருகிறார்கள். இதைக் கூட 'சென்னையில் ஒரு நாள் 2' குழு செய்யவில்லை.
'மெர்சல்' எப்படியும் நாளைய வசூலுக்குள் தப்பித்து விடும், 'மேயாத மான்' அடுத்த வாரமும் ஓடினால் வசூலைப் பெறும் என்றும், 'சென்னையில் ஒரு நாள் 2' படத்திற்குச் சிக்கல்தான் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.