ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் படம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. "28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வாங்கும் அரசு மருத்துவத்தை இலவசமாக ஏன் தருவதில்லை" என்ற கேள்விளை எழுப்பியது. இது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை.
அரசு மருத்துவமனைகள் சரியில்லாத காரணத்தால் மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள் வியாபார நோக்கத்தோடு மக்களிடம் பணம் பறிக்கிறார்கள் என்றும் காட்டியது. இது டாக்டர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் மெர்சல் படத்தை புறக்கணியுங்கள் என்கிறது டாக்டர்கள் சங்கம். இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு ஆஸ்பத்திரிகளில் நல்ல சேவை இல்லை என்பதால் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மக்கள் செல்கின்றனர் என்றும், பணம் சம்பாதிப்பதற்காகவே மருத்துவ தொழிலை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர் என்றும் 'மெர்சல்' படத்தில் நடிகர் விஜய் பேசுகிறார். மருத்துவ சமுதாயத்தினருக்கும், டாக்டர்களுக்கும் எதிராக விஜய் கருத்து தெரிவித்துள்ளார். எனவே மருத்துவ சங்கத்தினர் அனைவரும் அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும்.
இந்த பிரச்னைக்கு நாங்கள் பத்திரிகைகள் மூலமாகவோ, கோர்ட்டு மூலமாகவோ நிவாரணம் தேடப்போவதில்லை. மாறாக புதுவித போராட்டம் நடத்த உள்ளோம். அதன்படி இணையதள பக்கங்களில் 'மெர்சல்' படத்துக்கான இணைப்பு முகவரியை வெளியிடுவோம். அதன் மூலம் பலர் அந்த படங்களை கட்டணம் இன்றி பார்த்துவிடுவதால் டிக்கெட் விற்பனை பாதிக்கும். இந்த தகவலை அனைத்து டாக்டர்களுக்கும் பரவச்செய்து அமைதி போராட்டத்தில் ஈடுபடுங்கள்.
உங்கள் உறவினர்கள், நண்பர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த படத்தை புறக்கணிப்பதை உறுதி செய்யுங்கள். இது நம் போராட்டத்தையும் எதிர்ப்பையும் சம்பந்தப்பட்டவர்கள் நன்றாக உணரும்படி செய்யும். நமது ஒற்றுமையை காட்டுவதோடு, கவுரவத்தையும் நிலைநிறுத்துவோம். பட வசூலில் அடி கொடுத்தால் தான் அவர்கள் உணருவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.