டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் '2.0'. மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்தப் படம் ஒரு 'பிளாக் பஸ்டர்' படம் என்று ஆமீர்கான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஹிந்தித் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவ்வாறு கூறியுள்ளார்.
“ரஜினி சார் என்னை தொலைபேசியில் அழைத்து படம் பற்றிக் கூறினார். இயக்குனர் ஷங்கரைச் சந்தித்த போது, இந்தப் படம் ஒரு சாதனை படைக்கப் போகும் ஒரு பிளாக் பஸ்டர் படம் என்று உணர்ந்து கொள்ள எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை.
அந்தப் படத்தைப் பற்றி ஒவ்வொரு முறை யோசிக்கும் போதும் ஆச்சரியப்பட்டுப் போவேன். படத்தில் ரஜினி சாரைத் தவிர வேறு யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை. இந்தப் படம் ரஜினி சாருக்கான படம். படத்துடன் என்னால் எமோஷனல் ஆக இணைய முடியவில்லை. அதனால்தான் இந்த '2.0' பட வாய்ப்பை நான் ஏற்க மறுத்துவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.
ஆமீர் கான் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.