பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆனந்த் எல் ராய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஷாரூக்கான் நடித்து வருகிறார். இதில், ஷாரூக் குள்ள மனிதராக நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனேவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கவில்லை, சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து தீபிகா படுகோனே கூறுகையில், ஷாரூக்கான் படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன். இதில் நடிக்க வேண்டும் என்று ஷாரூக்கான் கேட்டு கொண்டார். அவரின் வேண்டுகோளுக்காகவும், எங்களின் நட்பிற்காகவும் நடிக்க சம்மதம் சொன்னேன். இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடந்தது. இரண்டு நாட்களும் கலகலப்பாக சென்றது என்று கூறியுள்ளார்.