எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம், தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை இயக்கிவருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இவற்றில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு யார் இசை அமைக்கிறார் என்பதை இதுவரை வெளியிடவே இல்லை.
இந்த படத்தில் இடம்பெறும் 'மறுவார்த்தை பேசாதே...' என்ற சிங்கிள் டிராக்கை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டனர். அப்போது, அந்த பாடல் எழுதியவர் தாமரை, பாடியவர் சித்ஸ்ரீராம் என்ற தகவலை மட்டும் வெளியிட்டவர்கள், இசை அமைப்பாளர் பெயரை மிஸ்டர் எக்ஸ் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 'மறுவார்த்தை பேசாதே...' பாடலுக்கு இசை அமைத்தவர் யார் என்பது சஸ்பென்ஸாக இருந்து வந்தது.
இந்நிலையில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனே இசையமைத்துள்ளதாக ஒரு தகவலும், சசிகுமார் நடிப்பில் 'கிடாரி', 'பலே வெள்ளையத் தேவா' ஆகிய படங்களுக்கு இசை அமைத்த தர்புகா சிவா இசை அமைத்திருப்பதாக ஒரு தகவலும் வெளியானது.
'எனை நோக்கி பாயும் தோட்டா'விற்கு இசை அமைப்பவர் தர்புக சிவா என்பதை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தர்புக சிவா இசை அமைக்கும் மூன்றாவது படம் இது.
இந்த படம் தவிர 'பொன் ஒன்று கண்டேன்' என்ற படத்துக்கும் தர்புகா சிவா இசையமைத்து வருகிறார்.