‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
முன்னணி தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா தனது மகன்கள் நாக சைதன்யா, அகில் ஆகியோரும் சினிமாவில் நடிக்க வந்த பிறகும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக, தோழா படத்தைப்போன்று தனது வயதுக்கும், அனுபவத்திற்கேற்ற மெச்சூரிட்டியான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். மேலும், தனது மருமகள் சமந்தாவுடன் இணைந்து நாகார்ஜூனா நடித்திருந்த ராஜூ ஹாரி காதி-2 என்ற படம் கடந்த 13-ந்தேதி வெளியானது.
இந்த நிலையில், அடுத்தபடியாக ஜனவரி மாதம் முதல் நானியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் நாகார்ஜூனா. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீ ராம் ஆதித்யா இயக்குகிறார்.
கடந்த சில மாதங்களாகவே தனது மகன் நாகசைதன்யா - சமந்தாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்து வந்த நாகார்ஜூனா, ரிலாக்ஸ் செய்வதற்காக ஒரு பத்து நாளைக்கு வெளிநாடு செல்லப்போவதாக தெரிவித்திருக்கிறார்.