மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகை வழக்கில் கைதாகி 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நடிகர் திலீப், கடந்த அக்-5ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். அதையடுத்து தான் நடித்து பாதியிலேயே நின்ற கம்மார சம்பவம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் திலீப்.
இந்தநிலையில் சிறப்பு புலனாய்வு குழு கூட்டம் இன்று திலீப் வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணைக்காக ஒன்று கூடியுள்ளது. இந்தகூட்டத்தின் முடிவில், திலீப் தற்போதுள்ள 11வது குற்றவாளி என்கிற நிலையில் இருந்து முதன்மை குற்றவாளியாக மாற்றப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. திலீப் வழக்கில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்கிற விபரம் இன்று இரவுக்குள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இதைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாத திலீப், ஐப்பசி மாதம் நடைதிறக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை சபரிமலைக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். அப்படியே அருகே இருந்த மாளிகைப்புறத்தம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்த திலீப், சபரிமலை மேல்சாந்தியையும் சந்தித்து ஆசி பெற்றார்.