பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
நடிகை வழக்கில் கைதாகி 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நடிகர் திலீப், கடந்த அக்-5ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். அதையடுத்து தான் நடித்து பாதியிலேயே நின்ற கம்மார சம்பவம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் திலீப்.
இந்தநிலையில் சிறப்பு புலனாய்வு குழு கூட்டம் இன்று திலீப் வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணைக்காக ஒன்று கூடியுள்ளது. இந்தகூட்டத்தின் முடிவில், திலீப் தற்போதுள்ள 11வது குற்றவாளி என்கிற நிலையில் இருந்து முதன்மை குற்றவாளியாக மாற்றப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. திலீப் வழக்கில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்கிற விபரம் இன்று இரவுக்குள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இதைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாத திலீப், ஐப்பசி மாதம் நடைதிறக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை சபரிமலைக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். அப்படியே அருகே இருந்த மாளிகைப்புறத்தம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்த திலீப், சபரிமலை மேல்சாந்தியையும் சந்தித்து ஆசி பெற்றார்.