ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
சாலையில் செல்லும்போது சிலநேரம் விபத்துக்களை உண்டாக்கும் காரணிகள் எதுவும் கண்ணில் பட்டாலும் கூட, நாம் (மட்டும்) பாதுகாப்பாக சென்றால் போதும் என்று தான் பலர் நினைப்பார்கள். ஆனால் இதேபோன்று சமீபத்திய நிகழ்வு ஒன்றில் அப்படி ஒரு விஷயத்தை கவனித்த நடிகை பார்வதி, தான் மட்டுமல்லாது தனக்குப் பின்னால் வருபவர்களின் உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண்ட சம்பவம் அவருக்கு பாராட்டுக்களை குவித்து வருகிறது.
சமீபத்தில் கொச்சி அருகில் உள்ள பனம்பள்ளி நகர் பகுதியில் காரில் வந்துகொண்டிருந்தார் பார்வதி. வழியில் ஒரு மின்சார கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு உடனே காரை நிறுத்திய பார்வதி, உடனே போனில் இதுகுறித்த தகவலை மின்சார வாரியத்திற்கு தெரியப்படுத்தினார். அதுமட்டுமல்ல, காரின் அருகே வெளியே நின்றுகொண்டு வாகன ஓட்டிகளை கவனமாக செல்லுமாறு எச்சரிக்கையும் செய்தார். பின் மின்சார ஊழியர்கள் வந்தபின்னரே அந்த இடத்தைவிட்டு கிளம்பினாராம் பார்வதி.