தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாலையில் செல்லும்போது சிலநேரம் விபத்துக்களை உண்டாக்கும் காரணிகள் எதுவும் கண்ணில் பட்டாலும் கூட, நாம் (மட்டும்) பாதுகாப்பாக சென்றால் போதும் என்று தான் பலர் நினைப்பார்கள். ஆனால் இதேபோன்று சமீபத்திய நிகழ்வு ஒன்றில் அப்படி ஒரு விஷயத்தை கவனித்த நடிகை பார்வதி, தான் மட்டுமல்லாது தனக்குப் பின்னால் வருபவர்களின் உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண்ட சம்பவம் அவருக்கு பாராட்டுக்களை குவித்து வருகிறது.
சமீபத்தில் கொச்சி அருகில் உள்ள பனம்பள்ளி நகர் பகுதியில் காரில் வந்துகொண்டிருந்தார் பார்வதி. வழியில் ஒரு மின்சார கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு உடனே காரை நிறுத்திய பார்வதி, உடனே போனில் இதுகுறித்த தகவலை மின்சார வாரியத்திற்கு தெரியப்படுத்தினார். அதுமட்டுமல்ல, காரின் அருகே வெளியே நின்றுகொண்டு வாகன ஓட்டிகளை கவனமாக செல்லுமாறு எச்சரிக்கையும் செய்தார். பின் மின்சார ஊழியர்கள் வந்தபின்னரே அந்த இடத்தைவிட்டு கிளம்பினாராம் பார்வதி.