இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'மெர்சல்' படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருமா என்ற சந்தேகம் செவ்வாய்க்கிழமை மதியம் திரைப்படத் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கும் வரை இருந்தது. அவர்கள் சான்றிதழ் வழங்கிய பிறகே படத்திற்கான முன்பதிவு மும்முரமாக ஆரம்பமானது. படத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் அளிக்கப்படவில்லை என விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அது அதிகாரப்பூர்வமான காரணம்.
ஆனால், படத்தைப் பார்த்த பலருக்கும் 'மெர்சல்' படத்திற்கு ஏன் தடைகள் என்பதற்கான காரணத்தை நேற்று புரிந்து கொண்டிருப்பார்கள். படத்தின் ஆரம்பத்தில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பற்றி வடிவேலு கிண்டலடித்துப் பேசுகிறார். அதோடு படத்தின் கிளைமாக்சில் '8 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூரில் மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுக்கும் போது, 28 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் இந்தியாவில் இலவச மருத்துவம் கொடுக்க முடியாதா,” என மக்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.
மேலே குறிப்பிட்ட இந்த இரண்டு காட்சிகளுக்கும் தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். இப்போது இந்த இரண்டு காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். 'மெர்சல்' விவகாரம் படம் வெளிவந்த பிறகும் நீளும் என்றே தோன்றுகிறது.