தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து நேற்று தமிழில் வெளிவந்த 'மெர்சல்' படம் இன்று தெலுங்கில் வெளியாவதாக இருந்தது. 'அதிரிந்தி' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் தெலுங்கிலும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது. ஆனால், கடைசி நேர சென்சார் பிரச்னையால் தமிழ்ப் படமே நேற்று குறிப்பிட்டபடி வெளிவருமோ வராதோ என்ற சூழ்நிலையே செவ்வாய்க்கிழமை வரை நீடித்தது. அதனால், தமிழ்ப் பட பிரச்சனையை மட்டும் அவசரமாக தீர்த்து முடித்தார்கள்.
தெலுங்கிலும் அதே சென்சார் பிரச்னை இருந்ததால் தமிழில் நீக்கப்பட்ட சில காட்சிகளை தெலுங்கில் நீக்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், படம் திட்டமிட்டபடி இன்று ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகவில்லை. அங்கு அடுத்த வாரம்தான் வெளியாகும் எனத் தெரிகிறது. இருந்தாலும் அது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே தற்போது 'மெர்சல்' வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் நேற்று கன்னட அமைப்பினர் பிரச்சனை செய்ததால் 'மெர்சல்' காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று வெளியாகாததால் முதல் சில நாட்களுக்கு படத்தின் மொத்த வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.