துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த 6-ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. 6ம் தேதி இந்து முறைப்படியும், 7ந் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு சமந்தாதாவும், நாக சைதன்யாவும் ஐதராபாத் திரும்பி விட்டார்கள். தற்போது இருவரும் நாகசைதன்யாவின் பூர்வீக வீட்டில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமந்தா திருமணத்திற்கு பிறகு தனது படுக்கை அறையில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார். "மகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம்" என்று அதன் அருகில் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோவில் சமந்தா இரவு உடை அணிந்து முதுகு பக்கத்தை காட்டியபடி நிற்கிறார். அவர் அணிந்திருக்கும் இரவு உடையில் மிசஸ் அக்னிநேனி என்று எழுதப்பட்டுள்ளது. அருகில் உள்ள படுக்கையில் களைந்து போடப்பட்டுள்ள ஆடைகள் கிடக்கிறது.
இந்த போட்டோ செல்பி இல்லை. இதனை நாகசைதன்யாதான் எடுத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. என்றாலும் படுக்கை அறை போட்டோவை சமந்தா வெளியிட்டிருப்பது. நாகர்ஜுனா குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.