சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தான் இயக்கும் எல்லா படங்களிலுமே ஏதாவது ஒரு காட்சியில் முகாம் காட்டுவதை வழக்கமாக கொண்டு வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் லிங்கா படத்தின் தோல்விக்குப்பிறகு நிறைய படங்களில் குணசித்ர நடிகராக உரு வெடுத்தார். தங்க மகன், ரெமோ என சில படங்களில் நடித்தார். இப்போது பள்ளி பருவத்திலே உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் அவர், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் ஜெயசிம்ஹா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அந்த படத்தை அடுத்து தமிழில் அரவிந்த்சாமியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது சதுரங்கவேட்டை-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வரும் அரவிந்த்சாமி, இந்த ஆண்டு இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். இந்த படம் போலீஸ் கதையில் உருவாகயிருப்பதாக கூறப்படுகிறது.