ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
காலத்தில் சினிமாவில் பம்ளிமாஸ் நடிகையாக இருந்தவர் சித்ரா. ஒரு விளம்பர படத்தின் மூலம் நல்லெண்ணெய் சித்ரா என்றும் அழைக்கப்பட்டார். அவள் அப்படித்தான் படத்தில் கே.பாலச்சந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட சித்ரா, ராஜ பார்வை படத்தில் கமலை காதலிக்கும் பார்வையற்ற பெண்ணாக நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு சின்ன பூவே மெல்ல பேசு, மனதில் உறுதி வேண்டும், ஊர்காவலன், என் தங்கச்சி படிச்சவ உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார். மலையாளத்தில் 60 படங்களுக்கு மேல் நடித்தார்.
பின்பு திருமணமாகி செட்டிலனார். தற்போது 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். மாஜி ஹீரோயின்கள் அம்மா நடிகைகளை ரீ-என்ட்ரி கொடுக்கும் காலத்தில் சித்ராவும் அந்த பட்டியலுக்குள் வருகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: திருமணத்திற்கு பிறகு மகளை வளர்க்க வேண்டியது இருந்தது. ஒரு மனைவியாக , தாயாக எனது கடமைகயை செய்ய வேண்டியது இருந்தது. அதனால் சினிமாவை விட்டு விலகி இருந்தேன். இப்போது மீண்டும் நடிக்க தயாராகி விட்டேன். எனக்கு பொருத்தமான நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் சித்ரா.