பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படத்தை எடுப்பதை விட அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் பெரிய விஷயமாக இருக்கிறது. அதற்காக சின்ன பட்ஜெட் படங்கள் முதல் பிரமாண்ட படங்கள் வரை படத்தை பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்கிறார்கள். அப்படி விளம்பரம் செய்யப்படும் எல்லா படங்களும் வெற்றி பெற்று விடுமா என்றால் அதுவும் கிடையாது. இதை தான் நடிகர் அஜய் தேவ்கனும் கூறுகிறார்.
நடிகர் அஜய் தேவ்கன், தான் நடித்துள்ள கோல்மால் அகைன் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு படத்திற்கு புரொமோஷன் என்பது முக்கியமான ஒன்று. சொல்லப்போனால் மக்களுக்கு ஒரு வித அலர்ட் கொடுப்பது போன்று தான் இந்த புரொமோஷனும். ஒரு படத்திற்கு கதை நன்றாக இருந்தால் அது ரசிகர்களுக்கு பிடித்திருந்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அந்த கதை இருந்தால் நிச்சயம் அந்தப்படம் சூப்பர் ஹிட்டாகிவிடும். ஒரு படத்தின் வெற்றி - தோல்வி என்பது வெறும் புரொமோஷன் மட்டும் கிடையாது என்று கூறியுள்ளார்.