இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மாஜி ஹீரோயின் நடிகை ஜெயசித்ரா. சினிமாவில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு கடந்த 2010ம் ஆண்டு நானே என்னுள் இல்லை என்றொரு படத்தை தனது மகன் அம்ரிஷை நாயகனாக வைத்து இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பின் பல வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த ஜெயசித்ரா, தற்போது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் 100 % காதல் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பது பற்றி ஜெயசித்ரா கூறுகையில், மீண்டும் கேமரா முன்பு வருவது எனக்குள் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இது என்னுடைய ரீ-என்ட்ரி என்று சொல்லலாம். தொடர்ந்து எனக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் ஜெயசித்ரா.