600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கடந்த வாரம் துல்கர் சல்மானின் இருமொழிப்படமான 'சோலோ' மலையாளத்தில் மட்டும் வெளியானது. ஆனால் இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் திருப்தியாக இல்லை என ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இயக்குனர் பிஜாய் நம்பியாரின் அனுமதி பெறாமலேயே க்ளைமாக்ஸை ரீ எடிட் செய்து வெளியிட்டது தயாரிப்பாளர் தரப்பு.
இதற்கு இயக்குனர் பிஜாய் நம்பியாரும், நாயகன் துல்கர் சல்மானும் தங்களது வருத்தம் கலந்த கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் இந்தப்படத்தை ஏன் ரீ எடிட் செய்தோம் என படத்தின் தயாரிப்பாளர் ஆப்ரஹாம் மேத்யூ விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, 'படத்தின் வேலைகள் முடிந்தபின் படத்தை போட்டு பார்த்தபோது, இது ரசிகர்களுக்கு திருப்தியாக இருக்காது என தெரியவந்தது. நானும் ஒரு ரசிகனாக இந்தப்படத்தை பார்த்தபோது, நான்காம் பகுதி, அதாவது ருத்ராவின் உலகம் எபிசோடில் இடம்பெற்ற க்ளைமாக்ஸ் ஏற்கும் விதமாக இல்லை. அதனால் இயக்குனரிடம் அதன் க்ளைமாக்ஸை கொஞ்சம் மாற்றுங்கள் என கூறினேன்..
அதுமட்டுமல்ல, இந்த நான்கு படங்களின் வரிசையை கொஞ்சம் மாற்றி, திரிலோக்கின் உலகம் எபிசோடை கடைசியாக வைக்கும்படியும் சொன்னேன்.. காரணம் அந்த பகுதிதான் ஒரு க்ளைமாக்ஸ்க்கு உண்டான நிறைவுடன் இருந்தது. ஆனால் இது எதையுமே காதில் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் இயக்குனர் பிஜாய் நம்பியார். எதிர்பார்த்த மாதிரியே படம் வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களே நிறைய வர ஆரம்பித்தன. வேறுவழியில்லாத நிலையில் தான் 'சோலோ' படத்தை ரீ எடிட் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஆப்ரஹாம் மேத்யூ.