'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ராஜ்குமார் ஹிரானி - சஞ்சய் தத் கூட்டணியில் முன்னாபாய் படம் இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன. இரண்டுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தவை. இதன் மூன்றாம் பாகம் முன்பே உருவாக வேண்டியது. ஆனால் சஞ்சய் தத்தின் சிறைவாசத்தால் தள்ளிப்போனது. அதன்பின்னர் ராஜ்குமார் ஹிரானியும் சில படங்களில் பிஸியாகிவிட்டார். தற்போது ராஜ்குமார், ரன்பீரை வைத்து சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்ததும் முன்னாபாய் 3 படத்தை ஆரம்பிக்க இருப்பதாக நடிகர் அர்ஷத் வர்சி கூறியுள்ளார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறுகையில், சமீபத்தில் ராஜ்குமார் ஹிரானியை சந்தித்தேன். சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தின் இன்னும் ஒருவாரம் தான் உள்ளது. இந்த பணிகளை முடித்ததும் முன்னாபாய் 3 படத்தை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார் என்றார்.
முன்னாபாய் படத்தின் முந்தைய பாகங்களை போன்று சஞ்சய் தத்தும், அர்ஷத் வர்சியும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர்.