ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜ்குமார் ஹிரானி - சஞ்சய் தத் கூட்டணியில் முன்னாபாய் படம் இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன. இரண்டுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தவை. இதன் மூன்றாம் பாகம் முன்பே உருவாக வேண்டியது. ஆனால் சஞ்சய் தத்தின் சிறைவாசத்தால் தள்ளிப்போனது. அதன்பின்னர் ராஜ்குமார் ஹிரானியும் சில படங்களில் பிஸியாகிவிட்டார். தற்போது ராஜ்குமார், ரன்பீரை வைத்து சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்ததும் முன்னாபாய் 3 படத்தை ஆரம்பிக்க இருப்பதாக நடிகர் அர்ஷத் வர்சி கூறியுள்ளார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறுகையில், சமீபத்தில் ராஜ்குமார் ஹிரானியை சந்தித்தேன். சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தின் இன்னும் ஒருவாரம் தான் உள்ளது. இந்த பணிகளை முடித்ததும் முன்னாபாய் 3 படத்தை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார் என்றார்.
முன்னாபாய் படத்தின் முந்தைய பாகங்களை போன்று சஞ்சய் தத்தும், அர்ஷத் வர்சியும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர்.