தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மத்திய அரசின் சில்க் மார்க் நிறுவனம் சென்னை கலைவாணர் அரங்கில் பட்டு விற்பனை மற்றும் கண்காட்சியை அமைத்துள்ளது. இந்த கண்காட்சியை பாலிவுட் நடிகை வித்யாபாலன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பண்டிகை காலங்களில் பெண்கள் விரும்பி பட்டுப் புடவைகள் வாங்குகிறார்கள். முன்பெல்லாம் விசேஷ காலங்களில்தான் பட்டு உடுத்துவார்கள். இப்போது அடிக்கடி உடுத்துகிறார்கள். இதனால் பட்டுபுடவைகளின் விற்பனை அதிகரித்திருக்கிறது. ஆனால் இதனை பயன்படுத்தி போலி பட்டுகளும் விற்கப்படுவது கவலை அளிக்கிறது. இதனால் வாங்குபவர்கள் தங்கள் பணத்தை இழப்பதோடு மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் சில்க் மார்க்கில் 100 சதவிகிதம் தூய்மையான பட்டுப் புடவைகள் கிடைக்கிறது. எனது விருப்ப உடை எப்போதும் பட்டுப்புடவைதான். பட்டுப்புடவைகளை நாம் பயன்படுத்துதன் மூலம் நெசவாளர்கள் பயன் அடைகிறார்கள். மேலும் பட்டுப்புடவைகள் நம் கலாச்சாரத்தின் அடையாளம். அதனை காக்க வேண்டியது நமது கடமை. என்றார்.