ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திரையுலகம் தொடர்பாகவும், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். டுவிட்டரில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 2 கோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஆண்டு எனது 75-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் அக்டோபர் 11 ம் தேதி அமிதாப் பச்சனுக்கு 75 வது பிறந்தநாள். ஆனால் நடிகையும், தனது மருமகளுமான ஐஸ்வர்யா ராயின் தந்தை, உடல்நலக்குறைவு காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். இந்த துக்கத்தில் இருந்து அவர்கள் மீண்டு வராததால், பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களை தவிர்க்க அமிதாப் முடிவு செய்துள்ளாராம். இதை கருத்தில் கொண்டே அமிதாப் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.