பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
சஞ்சய் தத்தை தொடர்ந்து பாடகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் ரன்பீர் கபூர். பாலிவுட்டின் மிகச்சிறந்த பாடகர் கிஷோர் குமார். பாடகராக மட்டுமல்லாது, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர். இவரது வாழ்க்கையை அனுராக் பாசு படமாக எடுக்க உள்ளார். இதில் ரன்பீர் கபூர் நடிப்பதை அவர் உறுதி செய்திருக்கிறார்.
இதுகுறித்து அனுராக் பாசு கூறுகையில், கதை தயாராகிவிட்டது. அதை தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. கிஷோரின் வாழ்க்கையை படமாக்குவதற்கு முன்னர் நிறையபேரிடம் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் படத்தை துவங்க வேண்டும் என்று எண்ணியுள்ளோம். தற்போது ரன்பீர் சஞ்சய் தத் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அயன் முகர்ஜியின் டிராகன் படத்தில் நடிக்கிறார். இதை இரண்டையும் முடித்து 2019-ல் தான் அவரது கால்ஷீட் கிடைத்திருக்கிறது. ஆனால் கிஷோர் குமாரின் குடும்பத்தார், இப்போதே படத்தை துவக்க வேண்டும் என்கிறார்கள், ஆகையால் அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அனுராக் கூறியுள்ளார்.