டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியாவின் பிரமாண்ட சினிமாவாகவும், இந்த நூற்றாண்டின் பிரமாண்ட சினிமாவாகவும் போற்றப்படுகிறது பாகுபலியின் இரண்டாம் பாகம். 300 கோடியில் உருவான படம் 1600 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கினார்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர் உள்பட பலர் நடித்திருந்தனர். மரகதமணி இசை அமைத்திருந்தார், கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். அர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஷோபு எர்லகண்டா, பிரசாத் தேவினேனி தயாரித்திருந்தார்கள்.
தமிழ், தெலுங்கில் தயாரான படம் ஹிந்தி, ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 28ந் தேதி வெளியான இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் நெட் ஒர்க் நிறுவனம் பலகோடி ரூபாய்க்கு வாங்கியது. அதன் ஒரு அங்கமான விஜய் டி.வியில் இந்தப் படம் வருகிற 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அன்றைதினம் தெலுங்கு, ஹிந்தி சேனலிலும் இந்தப்படம் ஒளிப்பரப்பாக உள்ளது. படம் வெளியாகி ஆறே மாதத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தீபாவளிக்குதான் புதுப் படங்கள் திரையிடுவார்கள். இப்போது அந்த டிரண்டில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. தீபாவளிக்கு போடும் புதுப்படங்களில் விளம்பரம் செய்ய வர்த்தக நிறுவனங்கள் விரும்புவதில்லை. காரணம் அப்போது தீபாவளி வியாபாரம் முடிந்திருக்கும். தீபாவளிக்கு முன்புதான் அவர்களுக்கு விளம்பரம் தேவை. அதை கருத்தில் கொண்டே பாகுபலி இரண்டாம் பாகம் தீபாவளிக்கு முன்னதாக ஒளிபரப்பாகிறது. தீபாவளிக்கு வேறு புதிய படம் ஒளிபரப்பாகும்.