இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கரன் ஜோகர், நடிகர் அக்ஷை குமாரை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட்டில் செய்திகள் பரவின. இது சரகாரி போராட்டத்தை அடிப்படையாக கொண்டது என்றம் கூறப்பட்டது. இப்படத்திற்கு தற்காலிகமாக கேசரி என பெயரிட்டுள்ளார்களாம்.
தற்போது இப்படத்தில் அக்ஷைக்கு ஜோடியாக நடிப்பதற்காக பரினீதி சோப்ராவிடம் பேசி உள்ளாராம் கரன் ஜோகர். இப்படத்தில் ஹவில்தர் இஷார் சிங் வேடத்தில் நடிக்கிறாராம் அக்ஷை. இப்படத்தில் அக்ஷையின் மனைவியாக பரினீதி சோப்ரா நடிக்கிறாராம். இப்படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளதாம். கேசரி படத்தை அனுராக் சிங் இயக்க, கரன் ஜோகர் தயாரிக்கிறார்.