கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
அமிதாப் பச்சனின் வாரிசான நடிகர் அபிஷேக் பச்சன், ஜேபி தத்தா இயக்கத்தில் பால்தன் என்ற படத்தில் நடிக்க இருந்தார். இவருடன் அர்ஜூன் ராம்பால், புல்கிட் சாம்ராட், சுனில் ஷெட்டி, சோனு சூட், ஜிம்மி ஷெர்கில், சித்தாந்த் கபூர், ஜாக்கி ஷெரப் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் ஓரிரு நாளில் லடாக் பகுதியில் ஆரம்பிக்க இருக்க நிலையில், திடீரென அபிஷேக் பச்சன் இப்படத்திலிருந்து விலகி உள்ளார்.
இதுகுறித்து தத்தா கூறுகையில், பால்தன் படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கவில்லை. படப்பிடிப்பு தொடங்க 24 மணிநேரம் இருந்த நிலையில் அவரின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஏற்கனவே லடாக்கில் முகாமிட்டு மற்ற நட்சத்திரங்களை வைத்து படமாக்க உள்ளோம். அபிஷேக்கின் வருங்கால படங்களுக்கு வாழ்த்துக்கள். விரைவில் அபிஷேக்கிற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை தேர்வு செய்து அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.