ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுந்தர்.சி இயக்கத்தில் மிர்ச்சி சிவா, விமல், அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் 2012 ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் - 'கலகலப்பு'. முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டதால் கலகலப்பு படத்துக்கு ஏ,பி,சி. என அத்தனை சென்டர்களிலும் வரவேற்பு கிடைத்தது.
ஆர்யா, ஜெயம்ரவியை வைத்து இயக்கவிருந்த பிரம்மாண்டமான படமான சங்கமித்ரா படம் இப்போது தொடங்க வாய்ப்பில்லாததால் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் சுந்தர்.சி. கலகலப்பு படத்தில் நடித்த மிர்ச்சி சிவாவும், 'பிக்பாஸ்' புகழ் ஓவியாவும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலகலப்பு-2 படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு.
'கலகலப்பு 2'வில் ஜீவா, ஜெய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க இருப்பதாகவும், கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரஸா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
சுந்தர்.சியின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். அக்டோபரில் இப்படத்திற்கான படப்பிடிப்பைத் துவக்க திட்டமிட்டுள்ள நிலையில், குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஜெய் கைது செய்யப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. ஒருவேளை ஜெய் கைது செய்யப்பட்டால் மிர்ச்சி சிவாவே நடிக்க வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.