பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
நீண்டநாள் காத்திருப்பை தொடர்ந்து திலீப் நடித்துள்ள 'ராம்லீலா' படம் வரும் செப்-28ல் ரிலீசாக இருக்கிறது. ஆனால் ஆச்சர்யமாக அதே தேதியில் தான் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் நடித்துள்ள 'உதாகரணம் சுஜாதா' படமும் திரைக்கு வர இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க திலீப் படத்தை பார்க்காமல் புறக்கணியுங்கள் என ஒரு சாரர் சோஷியல் மீடியாவில் முழங்கிக்கொண்டு உள்ளனர். ஆனால் மஞ்சு வாரியாரோ திலீப் படத்தை புறக்கணிக்க வேண்டாம்.. தியேட்டருக்கு சென்று பாருங்கள்” என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
சினிமாவில் காதல் திருமணம் செய்து ஆதர்ஷ தம்பதிகளாக கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் குடும்பம் நடத்திய திலீப்-மஞ்சு வாரியர் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சொல்லப்போனால் இவர்கள் பிரிவுக்கு ஒரு நடிகை விவகாரம் காரணமாக இருந்தது என்றால், அதற்கு சமீபத்தில் பாதிக்கப்பட்ட நடிகையும் இன்னொரு காரணமாக இருந்துள்ளார் என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிரிந்தபின் இருவரும் ஒருவரைப்பற்றி மற்றவர் குறை கூறுவது போன்ற எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளவில்லை..
தற்போது நடிகை விவகாரத்தில் சிறையில் இருக்கும் திலீப் பற்றி ஒரு வார்த்தை கூட இதுவரை மஞ்சு வாரியர் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அவர் திலீப் நடித்துள்ள 'ராம்லீலா' படத்தை புறக்கணிக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது..
“ஒரு படம் என்பது ஒரு தனி நபருக்கானது மட்டுமல்ல. பலபேரின் கூட்டு முயற்சியால் உருவானது. ஒரு தயாரிப்பாளர் கோடிகளை கொட்டி படத்தை எடுத்துள்ளார். இந்தப்படத்தை புறக்கணிப்பதால் அவருக்கு பாதிப்பு ஏற்படும்.. இதுபோன்ற நிலை தொடர்ந்தால் சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அதனால் 'ராம்லீலா' படத்தை புறக்கணிக்கவேண்டாம்” என தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.