வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்தும் பெற்றுத்தராத பெருமையை
12 வாரங்கள் தங்கியிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று தந்திருக்கிறது காமெடி நடிகர் வையாபுரிக்கு. அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்துள்ள அவர், தினமலர் வாசகர்களுக்காக
பிக்பாஸ் வனவாசம் குறித்து பேசியதிலிருந்து...
* இத்தனை நாட்களாக குடும்பத்தை பிரிந்தது உண்டா?
அதிகபட்சம் பத்து நாட்கள் பிரிந்திருப்பேன். ஆனால் 82 நாட்கள் பிரிந்திருந்தது இதுதான் முதல் முறை.
* பிக்பாஸ் அனுபவம்?
நான் நடித்த சினிமா நுாறு நாள் ஓடினால் கூட மக்கள் அதை ஒரு முறை தான் பார்ப்பர். என் படங்களில் ஒன்றிரண்டை தவிர மற்றவை நுாறு நாட்கள் ஓடியதில்லை. பிக்பாசில் 82 நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சினிமாவாக அமைந்தது. இதை விட பெரிய சந்தோஷம் எனக்கு கிடைக்காது.
* வெளியேறிய போது அழுதார்களாமே?
பிக்பாசிலிருந்து வெளியே வந்த போது 2 கோடி பேர் அழுததாக தெரிவித்தனர். நான் வெளியே வரக்கூடாது என மதுரை அருகே பெண்கள் பிரார்த்தனை செய்திருக்கின்றனர். அந்தளவுக்கு தங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக அண்ணனாக, அப்பாவாக பார்ப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. நடிகர் பிரபு போனில் ''எல்லோரையும் அழ வச்சுட்டப்பா,'' என்றார்.
* வெளியே வந்த பின் கமல் என்ன சொன்னார்?
சினிமாவில் என் திறமையை நிரூபிக்க பெரிய வாய்ப்பு இல்லை என அவரே கூறியிருக்கிறார். மும்பை எக்ஸ்பிரசில் என் நடிப்பை பார்த்து அவர் பாராட்டியதை இன்றும் மறக்க முடியாது. பிக்பாசில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் தரித்ததன் மூலம் திறமையை நிரூபிக்க முடிந்தது.
* வீட்டிற்கு சென்ற போது...
என் மனைவி ஓடிவந்து கட்டி பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டார். என் மகன், மகள் ஆகியோர் பள்ளியில் என்னை பற்றி தான் எல்லோரும் பாராட்டி பேசுவதாக தெரிவித்தனர். எங்கள் பகுதியில் இருப்பவர்கள் வீட்டிற்கு வந்து என்னை பார்த்து செல்கின்றனர். நடிகரான என்னை மக்களின் சொந்தக்காரனாக மாற்றி விட்டது பிக்பாஸ். நெல்லை, மதுரையிலிருந்து சில நண்பர்கள் அவர்கள் வீட்டில் ஒரு வாரம் தங்கி செல்லும்படி கூறி வருகின்றனர்.
* நுாறு நாள் இருக்க தோன்றவில்லையா?
இடையில் என் குடும்பத்தினர் வந்து சென்ற பின் 200 நாள் கூட இருக்கலாம் என தோன்றியது. ஆனால் உண்மையில் உடல் மெலிந்து விட்டது. நுாறு நாள், 50 லட்சம் ரூபாய் பெரிதாக தோன்றவில்லை.
* யார் ஜெயிப்பாங்க கருதுறீங்க?
உண்மையில் இது மக்கள் கைகளில் உள்ளது. கொடுக்கப்படும் சவால்களை சமாளிப்பது, மக்கள் ஓட்டளிப்பதை பொறுத்து ஏற்கனவே இருப்பவர்களில் யாரும் ஜெயிப்பார்களா அல்லது இடையில் வந்தவர்கள் ஜெயிப்பார்களா என தெரியாது.
* பிக்பாஸ் உண்மையில் ரீலா; ரியலா?
உண்மையில் எதையும் கூறி செய்வதில்லை. துாங்கி எழுந்தது முதல் படுக்கைக்கு செல்லும் வரை எல்லாமே யதார்த்தமாக நடக்கிறது.
* உடைகள் ஆபாசமாக இருந்தனவே?
எல்லோரும் அவர்கள் சொந்த உடைகளைதான் கொண்டு வந்திருந்தனர். வீடுகளில் என்ன டிரஸ் அணிவார்களோ அதை தான் அணிந்திருந்தனர். நான் கூட கைலி, பனியன்
கொண்டு சென்றதை தான் அணிந்தேன்.
* கமல் அரசியலில் இறங்குவாரா?
அவரும் இதுகுறித்து பேசவில்லை. நானும் அவரிடம் கேட்கவில்லை. சில நாட்களாக அவர் அரசியல் ரீதியாக என்ன பேசினார் என கூட தெரியாது.
* அடுத்த படம்?
பிக் பாஸூக்காக ஏற்கனவே இருந்த படங்களை முடித்து கொடுத்தேன். இப்போது தானே வெளியில் வந்திருக்கிறேன்.
பாராட்ட: actorvaiyupuri@yahoo.com