டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமூக பிரச்சனை தொடர்பான தனது கருத்தை யாரும் வேறு விதமாக திரித்து எழுதிவிடக்கூடாது என்பதற்காக தானே தன்னுடைய சொந்த பிளாக்கில் அவ்வப்போது தன் மனதில் பட்டதை எழுதி வருகிறார் நடிகர் மோகன்லால். நீண்டநாட்களாக பிளாக் எதுவும் எழுதாமல் இருந்த மோகன்லால், நேற்று சமீபத்தில் தான் பூடானுக்கு சென்றுவந்த அனுபவம் குறித்து எழுதியுள்ளார். தற்போது தான் நடித்துவரும் 'ஒடியன்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளார் மோகன்லால்.
பூடான் பற்றி அவர் குறிப்பிடுகையில், “எந்த ஒரு பயணமும் கிளம்பிச்சென்ற நம்மை திருப்பி அனுப்பும்போது புதிதாக மாற்றி அனுப்பவேண்டும். அப்படி ஒரு அனுபவம் தான் பூடானில் எனக்கு கிடைத்தது. இந்தப்பயணத்தில் மலைகள், பள்ளத்தாக்குகளில் பயணித்தேன்.அங்குள்ள மக்களிடம் பேசினேன்.குறிப்பாக பூடானில் என்னை கவர்ந்தது அதன் சுத்தம். அங்குள்ளவர்கள் அனைவருமே புறத்தை சுத்தமாக வைத்திருந்தால் தான் அகமும் (உள்ளமும்) தூய்மையாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். நான் பூடானுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருப்பதன் ரகசியத்தை அறிந்துகொள்ள சென்றேன். அறிந்தும் கொண்டே திரும்பியுள்ளேன்” என கூறியுள்ளார் மோகன்லால்.