நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் |
சமூக பிரச்சனை தொடர்பான தனது கருத்தை யாரும் வேறு விதமாக திரித்து எழுதிவிடக்கூடாது என்பதற்காக தானே தன்னுடைய சொந்த பிளாக்கில் அவ்வப்போது தன் மனதில் பட்டதை எழுதி வருகிறார் நடிகர் மோகன்லால். நீண்டநாட்களாக பிளாக் எதுவும் எழுதாமல் இருந்த மோகன்லால், நேற்று சமீபத்தில் தான் பூடானுக்கு சென்றுவந்த அனுபவம் குறித்து எழுதியுள்ளார். தற்போது தான் நடித்துவரும் 'ஒடியன்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளார் மோகன்லால்.
பூடான் பற்றி அவர் குறிப்பிடுகையில், “எந்த ஒரு பயணமும் கிளம்பிச்சென்ற நம்மை திருப்பி அனுப்பும்போது புதிதாக மாற்றி அனுப்பவேண்டும். அப்படி ஒரு அனுபவம் தான் பூடானில் எனக்கு கிடைத்தது. இந்தப்பயணத்தில் மலைகள், பள்ளத்தாக்குகளில் பயணித்தேன்.அங்குள்ள மக்களிடம் பேசினேன்.குறிப்பாக பூடானில் என்னை கவர்ந்தது அதன் சுத்தம். அங்குள்ளவர்கள் அனைவருமே புறத்தை சுத்தமாக வைத்திருந்தால் தான் அகமும் (உள்ளமும்) தூய்மையாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். நான் பூடானுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருப்பதன் ரகசியத்தை அறிந்துகொள்ள சென்றேன். அறிந்தும் கொண்டே திரும்பியுள்ளேன்” என கூறியுள்ளார் மோகன்லால்.