ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 100 பிரசண்ட் லவ் என்ற படம் தமிழிலும் அதே பெயரில் தயாராகிறது. நாக சைதன்யா நடித்த கேரக்டரில் ஜி.வி.பிரகாசும், தமன்னா நடித்த கேரக்டரில் லாவண்யாவும் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்தின் கதை லண்டனில் நடக்கும். இதனால் படப்பிடிப்பு குழுவினர் லண்டன் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் திடீரென லாவண்யா படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் லண்டன் பயணம் நின்றது.
தற்போது இதுகுறித்து படத்தின் இயக்குனர் சந்திரமவுலி பிலிம் சேம்பரில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 100 % காதல் படத்திற்காக லாவண்யா முறைப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் இந்த மாதம் முதல் வாரத்தில் லண்டனில் படப்பிடிப்பு நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தோம். லண்டனுக்கு கிளம்பும் கடைசி நேரத்தில் அவர் படத்திலிருந்து விலகுவதாக கூறினார். அதற்கான காரணம் எதையும் அவர் கூறவில்லை.
அவரது இந்த திடீர் முடிவால் எங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டது. எங்கள் பயணம் தடைபட்டது. லட்சக் கணக்கில் பணம் நஷ்டமானது. படப்பிடிப்பும் நின்று விட்டது. எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு லாவண்யாவுக்கு பிலிம் சேம்பர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.