ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் வெளிவந்த மணிசித்ரதாழ் படத்தைத்தான் இயக்குனர் பி.வாசு தமிழில் சந்திரமுகியாகவும், கன்னடத்தில் ஆப்த மித்ராவாகவும் இயக்கினார். இரண்டுமே வெள்ளி விழா படங்களாக அமைந்தது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் தமிழில் ரஜினியும், கன்னடத்தில் விஷ்ணுவர்த்தனும் நடித்தனர். மலையாளத்தில் ஷோபனா நடித்த கேரக்டரில் தமிழில் ஜோதிகாவும், கன்னடத்தில் சவுந்தர்யாவும் நடித்தனர்.
அதன் பிறகு பி.வாசு ஆப்தரட்ஷகா என்ற படத்தை கன்னடத்தில் இயக்கினார். இது ஆப்தமித்ரா சாயல் கொண்ட படம். ஆனால் அதன் தொடர்ச்சி அல்ல. இதிலும் விஷ்ணுவர்த்தன், விமலா ராமன், சந்தியா நடித்தனர். இதுவும் வெற்றி பெற்றது.
இயக்குனர் பி.வாசு சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி அதற்கான ஸ்கிரிப்ட்டும் எழுதினார். ஆனால் ரஜினி சைடிலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்காததால் இப்போது ஆப்த மித்ராவின் இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் எடுக்க முடிவு செய்துள்ளார். இதில் விஷ்ணுவர்த்தன் கேரக்டரில் ரவிசந்திரன் நடிக்கலாம் என்று தெரிகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
ஆப்தமித்ரா 2 கன்னடத்தில் வெற்றி பெற்றால் சந்திரமுகி இரண்டாம் பாகத்துக்கு ரஜினி சைடிலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் என்ற பி.வாசு எதிர்பார்க்கிறார்.