‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வாலி, குஷி என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் தொடர்ந்து படம் இயக்காமல் அதன்பிறகு அவரும் நாயகனாகி விட்டார். பல படங்களில் தன்னைத்தானே இயக்கிக்கொண்டார். ஆனால் இசை படத்திற்கு பிறகு இயக்கத்தை தள்ளி வைத்து விட்டு முழுநேர நடிகராகி விட்டார். அதற்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த இறைவி பட வாய்ப்புதான். அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பேசப்பட்டதால் தொடர்ந்து நடிப்பில் கவனத்தை திருப்பியவர், இப்போது ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாகியிருக்கிறார்.
அதேபோல் தமிழில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதோடு, அந்த கதாபாத்திரமாக முழுமையாக மாறி நடித்துள்ளார். குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா-விஜய் இடையேயான கிளைமாக்ஸ் காட்சியை நான்கு நாட்களாக படமாக்கினாராம் அட்லீ. அத்தனை நாளும் கொஞ்சம்கூட எனர்ஜி குறையாமல் நடித்தாராம் எஸ்.ஜே.சூர்யா. அதைப்பார்த்து அசந்து போன விஜய், ஸ்பாட்டில் அனைவர் முன்னிலையிலும் எஸ்.ஜே.சூர்யாவை மனதார பாராட்டியிருக்கிறார். இதேப்போன்று பல காட்சிகளில் சூர்யாவின் நடிப்பை மனதார பாராட்டியிருக்கிறார் விஜய்.