'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் தொடங்கியது. ஆனால் செப்டம்பர் 24-ந் தேதியான நாளையோடு இந்த சீசன் முடிவடைகிறதாம். இறுதிப்போட்டியில் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, அர்ச்சனா, ஹரி தேஜா, நவ்தீப் மற்றும் சிவா பாலாஜி ஆகிய ஐந்து பேரும் களத்தில் உள்ளனர். இந்த ஐவரில் ஒருவர் தான் வெற்றி பெற போகிறார். யார் அந்த வெற்றியாளர் என்பது நாளை(செப்., 24) தெரிந்து விடும்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாள் அன்று ஒரு லைவ் டான்ஸ் ஆடியபடியே நிகழ்ச்சியை தொடங்கிய ஜூனியர் என்டிஆர், ஜெய் லவகுசா படத்தில் நடித்தபடியே பிக்பாஸ் நிகழ்ச்சியை ரொம்ப கலகலப்பாக நடத்தி வந்தார்.
மேலும், மா டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நடத்தி வந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த சீசனின் இறுதி நாள் என்பதால், மாலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை நடத்துகிறார்கள். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்கள் அனைவரையும் பேட்டி காண்பதோடு, வெற்றிபெற்றவர்களையும் அறிவிக்கிறாராம் ஜூனியர் என்டிஆர்.